இந்திய-புருனே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புருனே சென்றன இந்திய கடற்படை கப்பல்கள் ஷிவாலிக் மற்றும் காட்மாட்
இந்தியாவின் 'கிழக்கை செயல்படுத்துக’ என்ற கொள்கைக்கு இணங்க இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் காட்மாட், இன்று (ஆகஸ்ட் 9, 2021) புருனே நாட்டின் முவராவை சென்றடைந்தன. இந்த பயணத்தின்போது புருனே நாட்டு கடற்படையுடன் பல்வேறு இருதரப்பு தொழில்சார்ந்த கலந்துரையாடல்களில் இரு கப்பல்களின் குழுவினரும் பங்கு பெறுவார்கள். இருநாடுகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்தவும், சிறந்த நடைமுறைகளில் இருந்து பயன்பெறவும், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகள் பற்றிய பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும்,
Read More