Friday, May 3, 2024
Home > அரசியல் > கட்சியை அழிப்பதற்க்கே பெண்களுக்கு இடஒதுக்கீடு..! வெளிவந்த கம்யூனிஸ்டுகளின் முகம்..!

கட்சியை அழிப்பதற்க்கே பெண்களுக்கு இடஒதுக்கீடு..! வெளிவந்த கம்யூனிஸ்டுகளின் முகம்..!

4-3-22/11.48am

கொச்சி : கட்சி மாநில குழுவில் பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவதை பற்றி கம்யூனிஸ்டுகளின் உண்மையான முகத்தை நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கொடியேறி பாலகிருஷ்ணன்.

கேரள சிபிஎம் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். நேற்று கொச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் கட்சி மாநிலக்குழுவில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்க்கு அவர் அளித்த பதில் தற்போது கேரளமக்களை கொந்தளிக்க செய்துள்ளது.

கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில் ” நீங்கள் கட்சியை அழிக்க வேண்டும் என்கிற நோக்கில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்” என கூறினார். அப்போது பெண்களை நியமித்தால் கட்சி அழிந்துவிடுமா என மீண்டும் கேள்வியெழுப்ப பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் கேரள கல்வித்துறை அமைச்சர் பிந்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோரை ஏற்கனவே அமைச்சர்கள் பலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

`

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காயம்குளம் சட்டமன்ற உறுப்பினர் பிரதிபா தனக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் சதிசெய்வதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் ஆணாதிக்க மனோபாவத்துடன் நடந்துகொள்வதாக நேற்று இதே கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

```
```

…..உங்கள் பீமா

for more details https://www.madrastelegram.com/face-book-post-allegations-kayam-kulam-mla-under-pressure/