Saturday, July 27, 2024
Home > செய்திகள் > முகநூல் வரும் பெண்களெல்லாம் விபச்சாரிகள்..! சர்ச்சையை கிளப்பிய தமிழக மௌலானா..!

முகநூல் வரும் பெண்களெல்லாம் விபச்சாரிகள்..! சர்ச்சையை கிளப்பிய தமிழக மௌலானா..!

1-12-21/6.24am

சென்னை : முகநூல் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக தளங்களை பயன்படுத்தும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என மௌலானா கூறியிருப்பது பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மௌலானா ஷம்சுதீன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ” நல்லா புரிஞ்சுக்கங்க. ஐந்து வேளை தொழக்கூடிய பெண், தாய் தந்தையரை கவனிக்க கூடிய பெண், மாமனார் மாமியார் கணவர் என அனைவருக்கும் பணிவிடை செய்யும் பெண், இறை அச்சம் உள்ள பெண் சொர்க்கத்துக்கு போவாளா என்றால் போகமாட்டாள்.

`

எப்போது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற இணையதளங்களை பயன்படுத்துகிறாளோ அப்போதே அவள் விபச்சாரி ஆகி விடுகிறாள். இல்லையெனில் விபசாரி ஆகப்போகிறாள். அவள் இறை அச்சத்தோடு நல்ல காரியங்கள் செய்தாலும் அவளுக்கு நரகமே கிடைக்கும். தனது புகைப்படம் விழாக்களின் புகைப்படம் குடும்ப புகைப்படம் எல்லாவற்றையும் சமூகத்தளத்தில் வெளியிட்டு லைக்குக்காக ஏங்க ஆரம்பித்த உடனேயே அவள் நரகத்துக்கு செல்ல தயாராகிவிட்டாள்” என பேசியுள்ளார்.

```
```

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்ணியவாதிகள் மாதர்சங்கங்கள் மற்றும் பெண்ணுரிமை காப்பாளர்கள் யாராவது நடவடிக்கை எடுக்க வரமாட்டார்களா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தான் போல தமிழ்நாடு மாறிவிடுமோ என அச்சம்கொள்வதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

…..உங்கள் பீமா