31-12-21/15.38pm
சென்னை : தமிழக ஊடகங்கள் நடுநிலைத்தன்மை தவறி ஒரே கட்சிக்கு வால் பிடிக்கும் செயல் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சனம் செய்து வரும்வேளையில் அதை நிரூபித்திருக்கிறது சத்தியம் டிவி.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2021/12/sathiyam.jpg)
சமீபத்தில் நியூஸ் செவென் எனும் திமுக ஆதரவு ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் பற்றிய 200 நாள் ஆட்சி குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் பலர் ஆட்சி மிக மோசம் என பதிலளித்திருந்தனர். அதில் மிரண்டு போன நிறுவனம் அந்த செய்தியை உடனடியாக நீக்கி தனது திமுக ஆதரவு நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டது.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2021/12/sathyamm.jpg)
அதே போல புதியதலைமுறை செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் மாறான முடிவுகள் வந்த பின்னர் அந்த பதிவை நீக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சத்தியம் டிவி எனும் கிறித்தவ மிஷனரி செய்தி நிறுவனம் ஒன்று நேற்று கருத்துக்கணிப்பை கோரியிருந்தது. தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர் யார் என கேள்வியெழுப்பியிருந்தது.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2021/12/satyam.jpg)
இந்த கேள்வியின் பின்னூட்டத்தில் பலர் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் பெயரை பதிவிட்டனர். மேலும் மேலும் அவரது பெயர் மட்டுமே பின்னூட்டத்தில் பதிவிடப்பட்டு வருகையில் தனது திமுக ஆதரவை நிலைநிறுத்த வேண்டி அந்த பதிவையே நீக்கி நடுநிலை தவறி திமுக ஆதரவு தொலைக்காட்சி என்கிற முத்திரையை வாங்கிக்கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2021/12/satyyam.jpg)
…..உங்கள் பீமா