Saturday, July 27, 2024
Home > செய்திகள் > ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைய முயன்ற SDPI குண்டர்கள்..!

ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைய முயன்ற SDPI குண்டர்கள்..!

1-12-21/11.35am

திருவனந்தபுரம் : ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் SDPI குண்டர்கள் நுழைய முயன்றதால் திருவந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ் சேவகரான சஞ்சித் என்பவர் மனைவியின் கண்முன்னே ஐம்பது முறைக்கு மேல் குத்தப்பட்டு படு பயங்கரமாக கொல்லப்பட்டார். சஞ்சித்தை கொன்றவர்களை பாராட்டி கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் SDPI ஐ உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தினர்.

அந்த ஊர்வலத்தில் “ஆர்ப்பரித்து வரும் கடலை கண்டு எதிரிகள் பயம் கொள்வர். சைத்தான்களின் நெஞ்சை பிளக்கும் காலம் வந்துவிட்டது . உங்களுக்காக ஆயிரமாயிரம் அஸ்ஸலாம்கள் இருக்கிறோம்” போன்ற சமூக மோதலை தூண்டக்கூடிய முழக்கங்களை எழுப்பினர். மேலும் சஞ்சித்தை கொன்ற நபர்களை பாராட்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது.

`

இந்நிலையில் திருவனந்த புரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலக்குத்துக்குள் புகுந்து SDPI குண்டர்கள் ஒரு தொண்டரை கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது அங்கே அதிகமானோர் திரண்டு நின்றதால் வேகமாக வெளியில் ஓடி தங்கள் இருசக்கரவாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

இந்த வீடியோ சமுக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக கொல்லம் கருநாகப்பள்ளி SDPI அலுவலகத்திற்கு கேரள போலீசார் சோதனையிட சென்றனர். அப்போது அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் போலீசே திரும்பிப்போ என முழக்கமிட்டு அவர்களை விரட்டியடித்தனர்.

```
```

மேலும் செய்தி சேகரிக்க சென்ற ஆங்கில தொலைகாட்சி நிருபரை அந்த குழு தாக்கியதில் நிருபர் படுகாயமடைந்தார். காவல்துறையினர் அவரை மீட்டு கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சமீப காலமாக கேரளாவில் PFI மற்றும் SDPI என்கிற இரண்டு இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக உள்ளதாக கேரள டிஜிபி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா