13-2-22/18.30pm
கோயம்புத்தூர் : தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வாக்கு சேகரிக்க தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாக்குசேகரிக்க செல்லும் இடங்களில் சாமானிய மக்களுடன் தோளில் கைபோட்டு இறுமாப்பில்லாமல் அடிமட்ட தொண்டனாக அண்ணாமலை கலந்துரையாடுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஈநிலையில் கோயம்புத்தூர் ஆவரம்பாளையம் பகுதியில் உண்ணாமலை என்ற வேட்பாளருக்கு வாக்குசேகரிக்க சென்ற அண்ணாமலை பொதுமக்களிடையே பேசினார். அப்போது ” அணுகுண்டே போட்டாலும் நாங்கள் நீட் தேர்வை ஆதரிக்கத்தான் செய்வோம். என்னுடைய சகோதரிகள் ஏழை மாணவர்கள் மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை.

உங்கள் பிரச்சினை தான் எங்கள் பிரச்சினை. நமது மோடிஜியும் சும்மா இருக்க மாட்டார். வெந்த புண்ணிலேயே வேலை பாய்ச்சுவார். எவ்வளவு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். நமது அலுவலகத்தில் பாம் போட்டுவிட்டார்கள். நமது பிரதமர் மோடி நான்குநாட்களுக்கு முன்னர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இனி தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவ மாணவிகள் அரசு நிர்ணயித்த 3200 ரூபாய் கட்டினால் போதும்.
தனியார் மருத்துவக்கல்லூரியில் வங்கிக்கணக்கில் கைவைத்த மோடி என வருகிற 19ஆம் தேதிக்குப்பின் திமுகவினர் போராட்டம் நடத்துவார்கள். இனி தனியார் கல்லூரியில் 30 லட்சம் நாற்பது லட்சம் கட்டணம் கிடையாது. அரசு நிர்ணயித்துள்ள 3200 மட்டுமே. இதுவே அடுத்த கட்ட அரசியல். நீங்கள் ஐந்து ரூபாய் டாக்டர் உருவாக்கவே இந்த முயற்சி.
கரூரில் இருக்கும் பிரபலம் வண்டி வண்டியாக இறக்குவார். கொலுசு உள்ளிட்ட பரிசுகளை வழங்குவார்.
எனக்கு கரூரிலேயே அவரை பற்றி தெரியும். நீங்கள் போடுகிற ஒவ்வொரு வாக்கும் பாரத பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும்” என பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றினார்.
…..உங்கள் பீமா