Thursday, March 28, 2024
Home > அரசியல் > முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆ.ராசா சர்ச்சை..! பதிலடி கொடுத்த டாக்டர். ஷ்யாம் கிருஷ்ணசாமி..!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆ.ராசா சர்ச்சை..! பதிலடி கொடுத்த டாக்டர். ஷ்யாம் கிருஷ்ணசாமி..!

3-11-21/11.14am

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் டாக்டர். ஷ்யாம் கிருஷ்ணசாமி.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி முழுவதும் போராட்டம் வெடித்தது. குறிப்பிட்ட நாளில் பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபடுத்த பல்வேறு மிஷனரிகள் முன்னராகவே திட்டமிட்டு பல கூட்டங்கள் நடத்தியதாக விமர்சிக்கப்பட்டது.

மேலும் போராட்ட தினத்தன்று  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முழக்கத்தை ஆரம்பித்த ஒருங்கிணைப்பாளர்கள் பலர் வரவில்லை. அமைதியாக தொடர்ந்த பேரணி சமூக விரோத சக்திகளின் ஊடுருவலால் கலவரக்காடானது. பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

கலவரக்காரர்களை அடக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சிலர் மரணமடைந்தனர்.
சம்பவம் நடந்த சில மாதங்கள் கழித்து மீனவர் அமைப்பு மற்றும் சில அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

`

இந்நிலையில் திமுக தலைவர் ஆ.ராசா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தூத்துக்குடி சம்பவத்திற்க்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுத்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். ஷ்யாம் கிருஷ்ணசாமி

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு அவர் காரணமாம்,

```
```

கருணாநிதி ஆட்சியில் காவல்துரை தொழிலாளர்களை ஆற்றில் அடித்து கொன்றதற்கு போராடியவர்களும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் காரணமாம்!

நல்லா இருக்குடே உங்க உருட்டு….” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா

#டாக்டர்ஷ்யாம் #புதியதமிழகம் #ஆராசா #எடப்பாடிபழனிச்சாமி #tutucorin #sterlite