Thursday, March 28, 2024
Home > அரசியல் > புத்தி பேதலித்துவிட்டது…! மம்தாவை சீண்டிய காங்கிரஸ்..!

புத்தி பேதலித்துவிட்டது…! மம்தாவை சீண்டிய காங்கிரஸ்..!

13-3-22/11.49am

மேற்குவங்கம் : நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தபின் அரசியல் விமர்சகர்கள் அரசியல்கட்சி தலைவர்கள் என அனைவரும் தேசிய கட்சியான காங்கிரசை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும் மமதா காங்கிரசை தன்னுடன் கூட்டணிவைக்க அழைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன.

ஆனால் மமதா கூறியது என்னவெனில் ” பிஜேபிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கூட்டணி சேரவேண்டும். காங்கிரஸ் தனது தனித்தன்மையை இழந்துவிட்டது. இனி காங்கிரசை நம்பியிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை” என குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தியை ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருந்தன. மமதாவின் இந்த கூற்றுக்கு பதிலளித்த மேற்குவங்க காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி மமதாவை கிண்டலடித்துள்ளார்.

`

” காங்கிரஸ் 20 சதவிகித வாக்குவங்கியை பெற்றிருக்கிறது. மமதாவின் கட்சி எங்கே இருக்கிறது எத்தனை வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கிறது என நினைத்து பார்க்கவேண்டும். புத்திபேதலித்த ஒருவருக்கு பதிலளிக்க அவசியம் இல்லை. இந்தியா முழுவதும் காங்கிரஸ் 700 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. தீதி எத்தனை எம்.எல்.ஏக்களை வைத்துள்ளார். மமதா பிஜேபி ஏஜென்ட் போல செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் இல்லையென்றால் மமதா பிறந்திருக்கவே முடியாது.

```
```

கோவாவில் பிஜேபியை குஷிப்படுத்தவும் காங்கிரசை தோற்கடிக்கவுமே திரிணாமுல் செயல்பட்டது. அனைவருக்கும் இது தெரியும்” என செய்தியாளர்களிடம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா