இல. கணேசன் முதல் தமிழிசை சௌந்தர ராஜன் வரை தலைமை கண்ட பிஜேபி தமிழகத்தில் ஒரு நிலையான கட்சியாக வலுப்பெறவில்லை என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் தமிழக பிஜேபி தலைவராக ஒரு இளைஞர் அதுவும் ஒரு காவல்துறை அதிகாரி தலைமை ஏற்றபின் தமிழகத்தில் பாஜக புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
தமிழக தலைவர் கே அண்ணாமலை அவர்களின் களப்பணியால் பல மாவட்டங்களில் பிஜேபி தொண்டர்கள் அதிரடி காண்பிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இன்று காலை தென்காசியில் போராட்டம் நடத்தியதுபோல திருச்செந்தூரில் ஒரு அதிரடி காண்பித்திருக்கின்றனர்.
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கால அட்டவணையை மறைத்து திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதை திருச்செந்தூர் பிஜேபியின் நெல்லையம்மாள் அவர்கள் தலைமையில் அகற்றினர். மேலும் பல இடங்களில் தடையை மீறி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் கிழித்தெறிந்தனர்.
….உங்கள் பீமா
#bjp #tamilnadu #tiruchendur