Friday, April 26, 2024
Home > அரசியல் > அவர்களை மிஞ்சிய இவர்கள்..! 2021ன் சிறந்த முட்டு..!

அவர்களை மிஞ்சிய இவர்கள்..! 2021ன் சிறந்த முட்டு..!

22-12-21/12.43pm

இந்தியா : அரசியல் கட்சிகள் அள்ளிவிடும் பொய்களை சில்லறையை சிதறவிட்டு கொண்டாடுபவர்கள் தொண்டர்கள். நிறுத்தி அந்த திட்டத்தின் அல்லது வாக்குறுதியின் சாராம்சம் அல்லது அதன் பயனாளிகள் பயன்பாடுகள் பற்றி கேட்டால் எதுவும் சொல்லத்தெரியாது.

சமீபத்தில் CAA சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு அப்பாவியின் பேச்சை வீடியோவில் காணமுடிந்தது. அதே போல ஒரு எம்பி GST பற்றியும் இடஒதுக்கீடு பற்றியும் புள்ளிவிவரங்களோடு சொல்வதாக நினைத்து தன்னுடைய அறியாமையை வெளிக்காட்டியிருந்தார். அவரை பின்தொடரும் மக்களின் நிலையை நினைத்தால் தமிழகம் தலைநிமிரும் என்கிற நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது.

அதே போல இந்த கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தை எதிர்க்கிறேன் என்கிற போர்வையில் சாமானிய மக்களின் குரல்வளையை நெரித்து தங்களுக்கான இடத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் ” இந்தியாவிலேயே மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக கொண்ட மாநிலம் கேரளா. இங்குதான் மருத்துவம் தலைசிறந்து விளங்குகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

`

ஆனால் சோகம் என்னவெனில் கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரகுமான் கடந்த வாரம் கேரளாவில் சிகிச்சை முறை சரியில்லையென பாரினுக்கு பறந்துவிட்டார். அதுவும் மாநில அரசின் செலவில் மக்களின் வரிப்பணத்தில். இதுவே கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம். ஏன் இங்கே தமிழகத்தில் சில்லறை சிதறவிடும் கம்யூனிஸ்டுகளை பார்ப்போமே.

```
```

தா.கிருட்டிணன் லீலாவதி போன்ற எழுச்சிமிக்க தலைவர்களை கொன்றதாக கூறப்படும் கட்சியுடன் கூட்டணி அமைத்து மதுரையில் சீட்டு வாங்கி ஜெயித்தும் விட்டார்கள். மதுரையில் மறைந்த லீலாவதி கிருஷ்ணன் ஆத்மா இவர்களை மன்னிக்குமா என்பதை இவர்கள் எறியும் சில்லறைகளில் காணலாம். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் 2019ல் எடப்பாடி அரசு அராஜகம் என குறிப்பிட்ட இவர்கள் தற்போது இடிக்கப்பட்ட பூர்வகுடிகள் குடியிருப்பு பற்றிய பதிவில் அரசே இது நியாயமா என கூட்டணிக்கட்சிக்கு வலிக்காமல் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் பதிவில் நெட்டிசன்கள் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா