14-11-21/ 12.00pm
மஹாராஷ்டிரா; மீண்டும் ஒரு மும்பை கலவரத்தை தாங்கும் நிலையில் நாடு இல்லை. மதமென பிரிந்தது பொது என ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டும் சொல்லிவிட்டு சிறுபான்மை எனும் பெயரில் கலவரங்களை வன்முறைகளை தூண்டும் பிரிவினரை நாட்டின் மக்களும் நாட்டின் சட்டதிட்டங்களும் அரசியல் அமைப்பும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
திரிபுராவில் மசூதிகள் இடிக்கப்பட்டதாக பொறுப்பற்ற முறையில் பொய்யான தகவலை பரப்பிய சில நிருபர்கள் மற்றும் சில தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்ட கருத்தால் மஹராஷ்டிரா பற்றி எரிகிறது. நமுனஹள்ளியை சேர்ந்த இஸ்லாமிய கும்பல் அமராவதி பகுதியில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து கல்லெறிந்து வருகின்றனர். நகரின் பல பகுதிகளில் இந்துக்கள் கடைகள் மட்டும் தேடி தேடி சூறையாடப்படுவதாக இணையத்தில் வீடியோக்கள் உலவுகின்றன.
மேலும் அரசியல் தலைவர் ப்ரீத்திகாந்தி சிவாஜி மஹாராஜ் பிறந்த பூமியில் சில கலவரக்காரர்களால் மீண்டும் ரத்தம் சிந்துகிறது என பதிவிட்டுள்ளார். ராணா அய்யூப் எனும் பெண் நிருபர் ஆரம்பித்து வைத்த டூல்கிட் என பேச்சு அடிபடுகிறது. அவர்தான் திரிபுராவில் மசூதிகள் இடிக்கப்படுகிறது என செய்தியை உலவ விட்டது என கூறப்படுகிறது. மேலும் ராகுலும் இது குறித்த ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிபுரா அரசு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என விளக்க அறிக்கை அளித்தபின்னும் மர்ம மார்கத்தினர் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருவது தேசமெங்கும் மீண்டும் கலவரம் வன்முறைகள் வெடித்துவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் மஹாராஷ்டிரா காவல்துறை கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக குறைகூறுகின்றனர். இந்துக்கள் நடத்திய போராட்டத்தில் புகுந்து அடித்து விரட்டிய போலீஸ் தற்போது அமைதிகாப்பதாக குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் அமராவதி பகுதியில் நான்குநாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
…….உங்கள் பீமா