Friday, March 29, 2024
Home > செய்திகள் > ட்ரெண்டாகும் இந்துமத வெளியேற்றமே விடுதலை..! சீமானால் உருவான சர்ச்சை..!

ட்ரெண்டாகும் இந்துமத வெளியேற்றமே விடுதலை..! சீமானால் உருவான சர்ச்சை..!

கடந்த சில நாட்களுக்கு முன் செபஸ்டியா சைமன் வெள்ளாளர் குல மக்களை தவறாக சித்தரித்து பேசியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து சிலர் ட்விட்டரில் மன்னிப்பு கேள் சீமான் எனவும் இந்து மத வெளியேற்றமே விடுதலை எனவும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதிலும் ஒருவர் ” சைவர்கள் வைணவர்களாகிய எங்களை இந்துக்கள் என மாற்றியது பார்ப்பனியம்” என புது கதை சொல்கிறார். ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட தமிழர்களில் 80% வெள்ளாளர்களாம். இந்துமத காவலர்கள் கொன்றுவிட்டார்களாம்.

இன்னும் ஒருவர் ஒருபடி மேலே போய் வெள்ளாளர்களுக்கு தனி நாடு என கோரிக்கை விடுத்திருக்கிறார். “இந்த நெட்டிசன்களெல்லாம் திடீரென புற்றிலிருந்து புறப்பட்ட கரையான்களை போல பிரிவினைவாதத்தை புகுத்த ஆரம்பிக்கிறார்கள். இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

`

சைவர்களுக்கு என தனி மதம் வேண்டும் தனி நாடு வேண்டும் என திடீரென எழுந்த இக்குரல்கள் ஏதோ பிரிவினை உள்நோக்கத்தோடு எழுந்திருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். சம்மந்தமில்லாமல் மதுரை ஆதீனத்தையும் இழுத்துவிட்டிருக்கின்றனர்.

```
```

….உங்கள் பீமா

#seeman #ntk