Saturday, July 27, 2024
Home > செய்திகள் > இரண்டே வார்த்தை..! சூர்யாவை காலி செய்த ரங்கராஜ் பாண்டே…!

இரண்டே வார்த்தை..! சூர்யாவை காலி செய்த ரங்கராஜ் பாண்டே…!

6-11-21/ 5.45am

செய்தியாளராக இருந்து நடுநிலை அரசியல் விமர்சகராக மாறியிருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவரது பேட்டிகள் மற்றும் கேள்வி தொடுக்கும் விதம் மற்றும் பேட்டியெடுப்பவரை அணுகும் விதம் என அனைத்தும் நாகரீகமாகவும் அதே சமயத்தில் கேள்விகள் அழுத்தமாகவும் இருக்கும்.

சமீபத்தில் இவர் போட்ட ட்வீட் ஆளும்கட்சியை மறைமுகமாக சாடியது. அந்த பதிவு இணையத்தையே கலக்கியது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதே போல தற்போது அவர் போட்டிருக்கும் பதிவு உள்நோக்கத்தோடு உண்மைக்கதை எனும் பெயரில் வரலாற்றை திரித்து கூறும் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சம்மட்டியடியாக விழுந்திருக்கிறது.

நடிகர் சூர்யா நடித்து வெளிவந்திருக்கும் ஜெய்பீம் எனும் திரைப்படம் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால் உள்நோக்கத்தோடு குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் தாக்கியெடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

`

ராசாக்கண்ணு பாஷ்யம் சுப்பிரமணியன் வீராசாமி எனும் பெயர்களை அப்படியே வைத்துக்கொண்டு அந்தோணிசாமி எனும் பெயரை மட்டும் தெளிவாக உள்நோக்கத்தோடு குருமூர்த்தி என திரித்து கூறியிருக்கின்றனர். மேலும் சூர்யாவின் சூரரை போற்று எனும் கடந்த திரைப்படத்திலும் உண்மைக்கதை என கூறி கதாநாயகனின் குணாதிசயங்களையும் நம்பிக்கைகளையும் அப்படியே குறிப்பிட்ட பிரிவினரை மறைத்து திரித்து வெளியிட்டிருப்பார்கள்.

அதே போல தற்போதும் சூர்யா செயல்பட்டிருப்பது அனைத்து தரப்பிலும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ரங்கராஜ் பாண்டே தனது ட்விட்டரில் “உண்மைச் சம்பவம் என்பது, உள்ளதை உள்ளபடி சொல்வது. பெயர்களையும் அடையாளங்களையும் (மட்டும்) மாற்றினால், அதன் நோக்கம் சந்தேகிக்கப்படுவது இயல்பே. சத்யமேவஜெயதே வாய்மையேவெல்லும்” என மறைமுகமாக சூர்யாவை தாக்கியிருக்கிறார்.

```
```

……உங்கள் பீமா

#rangarajpande #tweet #jaibheem #surya