Monday, May 19, 2025
Home > செய்திகள் > திருவள்ளூர் எஸ்.பி வருண் VS புதிய தலைமுறை..! என்னதான் பிரச்சினை…?

திருவள்ளூர் எஸ்.பி வருண் VS புதிய தலைமுறை..! என்னதான் பிரச்சினை…?

5-1-21/11.14am

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருப்பவர் வருண்குமார். நேர்மையான இளம் அதிகாரி என பெயரெடுத்தவர். மேலும் இவர் பதவியேற்றதிலிருந்து ரவுடிகள் அட்டகாசம் திருவள்ளூரில் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஆபாச கானா பாடல் பாடிய சரண் என்பவரை போக்ஸோவில் கைது செய்து பின்னர் கடும் எச்சரிக்கை செய்து ஜாமீனில் அனுப்பியவர் இந்த வருண் குமார் எஸ்பி. இவர் தனது சொந்த வாழ்வில் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக ஒரு பெண் இவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். பிரியதர்ஷினி என்ற அந்த பெண் வருண் தன்னை காதலித்ததாகவும் திருமணம் செய்ய வற்புறுத்துகையில் வரதட்சிணை அதிகம் கேட்டு தட்டிக்கழித்ததாகவும் வழக்கு தொடுத்திருக்கிறார்.

`

அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. மேலும் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக சொல்லபப்டுகிறது. இந்நிலையில் புதியதலைமுறை செய்தி நிறுவனத்தை சேர்ந்த நிரஞ்சன் குமார் என்பவர் வருண் குமார் பற்றிய தவறான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதை குறிப்பிட்டு எஸ்பி வாரும் குமார் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

```
```

மேலும் வழக்கு நடக்கும் நேரத்தில் செய்தி சேகரிக்கலாமே தவிர ஒரு நீதிபதிபோல கருத்து சொல்ல கூடாது எனவும் கண்டித்துள்ளார். ஒரு நேர்மையான அதிகாரியின் பின்புலத்தை தோண்டி தங்களுக்கு ஏற்றமாதிரி புனைந்து சொல்பவர்கள் தான் புதிய தலைமுறை நிருபர்கள் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா