Monday, May 19, 2025
Home > செய்திகள் > கைரானா சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி நஹித் ஹசனுக்கு சீட்டு..! உச்சநீதிமன்றத்தில் மனு..!

கைரானா சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி நஹித் ஹசனுக்கு சீட்டு..! உச்சநீதிமன்றத்தில் மனு..!

17-1-22/15.25pm

டெல்லி : உத்திரப்பிரதேச மாநிலம் கைரானா பகுதியில் இருந்து இந்துக்களை விரட்ட மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் நஹுத் ஹசனுக்கு கைரானா தொகுதி எம்.எல்.ஏ சீட்டை வழங்கியுள்ளது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபத்யாய் எனும் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் ” தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரின் குற்ற பின்புலங்கள் சமூக ஊடகங்களிலும் டிஜிட்டல் அச்சுகளிலும் கட்சி சார்ந்த இணையத்திலும் 48 மணிநேரத்தில் வெளியிடப்பட வேண்டும்.

ஆனால் கைரானா தொகுதியில் இருந்து சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் நஹத் ஹசன் குற்றப்பதிவுகளை மின்னணு அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடவில்லை. இது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரான செயலாக உள்ளது.

`

அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களையும் குற்ற பின்புலங்களை உடனடியாக வெளியிட தேர்தல் ஆணையத்திற்க்கு நீதிமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குண்டர் சட்டத்தில் கைதான நஹத் ஹசன் மீது கொலை கொள்ளை மற்றும் பல கிரிமினல் வழக்குகள் பணம் பறித்தல் போன்ற வழக்குகள் உள்ளன. எம்எல்ஏ எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தால் தப்பியோடியவராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.

```
```

இதுகுறித்து எந்த ஒரு ஆவணங்களும் இணைக்கப்படவில்லை. ஆகவே நஹத் ஹசன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

…..உங்கள் பீமா