12-1-22/10.54am
கேரளா : கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கேரளா மாடல் உண்மை நிலை இதன்மூலம் வெளிப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மலப்புரம் களிக்காவு பகுதியில் அமைந்துள்ளது மலியேக்கல் கிராமம். இங்கு ஒரு அரசு எல்பி பள்ளி கட்ட பஞ்சாயத்து நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கு நிதி திரட்ட பொதுமக்கள் உதவியை நாடியது. அதையடுத்து 2019ல் உள்ளூர் மக்கள் புட்பால் டோர்னமென்ட் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
அந்த டோர்னமென்ட் மூலம் 4 லட்சம் நிதி திரட்டப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாக தரப்பில் 5 லட்சம் பங்களிப்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளி கட்டிடம் இரண்டு தளங்கள் என நிர்ணயிக்கப்பட்டு அதற்க்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதனிடையே கொரோனா பரவல் வேகமெடுக்கவே பணி தாமதமானது.
ஒருவழியாக கடந்த வாரம் கட்டிடப்பணிகள் முடிந்தது. அங்கு ஒரு உலக அதியம் நிகழ்ந்திருப்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. கட்டிடத்தை பார்வையிட சென்ற மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அப்படி ஒரு அதிசயத்தை உலகில் யாராலும் செய்திருக்க முடியாது.

இரண்டு தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் மேல்மாடிக்கு செல்ல எந்த ஒரு படிக்கட்டுகளும் கட்டப்படவில்லை. ஆனால் முதல்தளத்தில் ஐந்து அறைகள் மட்டும் உள்ளன. கீழிருந்து மேலே செல்ல எந்த ஒரு படிக்கட்டும் அமைக்காமல் கட்டிடத்தை எழுப்பிய கேரள அரசை மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
உலகநாடுகளையே மிரளவைத்த இந்த கட்டிடம் உலகின் எட்டாவது அதிசயம் என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
……உங்கள் பீமா