Friday, March 29, 2024
Home > செய்திகள் > டைரக்டர் மோகன் ஜி சத்ரியன் போட்ட ஒரே ட்வீட்..! கதறும் உடன்பிறப்புக்கள்..!

டைரக்டர் மோகன் ஜி சத்ரியன் போட்ட ஒரே ட்வீட்..! கதறும் உடன்பிறப்புக்கள்..!

5-11-21 / 16.09pm

டைரக்டர் மோகன் ஜி சத்ரியன் திரைப்படம் இயக்கினாலும் இணையதளத்தில் பதிவு போட்டாலும் ஒரு கும்பல் அவரை பின்தொடர்ந்து வசைபாடிக் கொண்டே இருக்கும். மோகன் ஜி அவர்களின் நியாயமற்ற குரலை கடந்து சென்று கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் போட்ட ஒரு பதிவின் பின்னூட்டத்தில் உடன்பிறப்புக்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மோகன் தனது பதிவில் “பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.

ஆனால் திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்.. #ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

`

இந்த பதிவில் சிலர் ஆபாசமாகவும் தரமற்ற முறையில் விமர்சித்தும் சிலர் ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

```
```

….உங்கள் பீமா

#jaibheem #surya #mohang