Saturday, July 27, 2024
Home > அரசியல் > இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் முஹம்மது அலி ஜின்னா..! முன்னாள் முதல்வர் அதிரடி..!

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் முஹம்மது அலி ஜின்னா..! முன்னாள் முதல்வர் அதிரடி..!

1-11-21 / 5.35am

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் முஹம்மது அலி ஜின்னா என கூறி சர்ச்சைக்கு புள்ளி வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர். காங்கிரஸ் இதுகுறித்து எந்த ஒரு கண்டனமோ கருத்தோ சொல்லாமல் மௌனம் காப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகம் அமைத்து கூட்டணிக்கு லெட்டர்பேட் கட்சிகளை இழுத்து வருகின்றன. இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலத்தின் பெரிய ரவுடி என அறியப்பட்ட ஒரு நபர் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சியில் இணைந்தார்.

இதனால் தனக்கு சிறுபான்மையினர் ஒட்டு விழும் என கணக்கு போட்டு காய் நகர்த்த முயற்சி செய்து வருகிறார் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். ஆனால் இந்துக்களின் ஒட்டு வங்கியும் பாதிக்கப்பட கூடாது என்பதற்க்காக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல தவறுவதில்லை.

`

அதுவே சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் கூட்டம் நடக்கும் போது தவறாமல் அல்லாஹ் ஹு அக்பர் என கூறி சிறுபான்மையின மக்களை கவரும் முயற்சியில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க கொடுத்தது முஹம்மது அலி ஜின்னா என கூறி சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளார்.

இது உத்திரபிரதேச அரசியலில் பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது. பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் அகிலேஷின் கருத்துக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.

```
```

……உங்கள் பீமா

#அகிலேஷ்யாதவ் #பொதுக்கூட்டம் #முஹம்மதுஅலிஜின்னா #akileshyadav #samajwadiparty #independence