Tuesday, May 20, 2025
Home > அரசியல் > நீ எப்படிம்மா எம்.எல்.ஏவான..? மிரண்டுபோன கொல்கத்தா உயர்நீதிமன்றம்..!

நீ எப்படிம்மா எம்.எல்.ஏவான..? மிரண்டுபோன கொல்கத்தா உயர்நீதிமன்றம்..!

மேற்குவங்கம் : இந்தியாவில் 2015 வரை சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல் என காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல மேற்குவங்கத்தில் மட்டும் பர்மா மற்றும் பங்களாதேஷிலிருந்து ஊடுருவும் எண்ணிக்கை சமீபகாலமாக ஐஹிகரித்து வருவதாக எல்லை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில் மேற்குவங்கத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தலில் பங்களாதேசிகள் மற்றும் ரொஹிங்கியாக்கள் சட்டவிரோதமாக வாக்களித்து வருகின்றனர். சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலில் பல பங்களாதேஸ் குடிமகன்கள் இந்திய தேர்தலுக்கு வாக்களித்து பிடிபட்டிருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் மமதாவின் அதிகாரத்தால் மூடிமறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

`

இதனிடையே 2021 மேற்குவங்கத்தில் நடைபெற்றன சட்டமன்ற தேர்தலில் பங்கன் தக்ஷின் தொகுதியில் திரிணாமூல் சார்பில் அலோராணி சர்கார் என்பவர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து பிஜேபி தலைவர் ஸ்வபன் மஜூம்தார் கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. மனுவின்மீதான விசாரணை நீதிபதி பிபேக் சௌத்ரி முன் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் ” அலோக் ராணி சர்கார் இந்திய குடிமகனே அல்ல. பங்களாதேஷில் அவருக்கு இன்னும் வாக்கு உரிமை இருக்கிறது. 1950இந்த பிரிவு 16ல் கூறப்பட்ட அரசியலமைப்போரின் 173 ஆவது பிரிவின்கீழ் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் இடம்பெற அவருக்கு உரிமையில்லை.


```
```

மார்ச் 31 2021ல் பங்கன் தக்ஷிண தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதே டகெதல்நிபோது அலோக் ராணி வங்காளதேச குடிமகனாக இருந்தார் என்பது ஆதாரங்களின்படி நிரூபிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் வாக்குரிமை குடியுரிமை இருக்கையில் எப்படி அவர் இந்திய குடிமகன் ஆனார் என்பது திகைக்க வைக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்மீது விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்” என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பங்காளதேசியாக இருந்துகொண்டு இந்திய நாட்டின் மாநில சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏவாக மாறியிருப்பது இந்தியாவின் பாதுகாப்பை சமரசம் செய்யும் முயற்சியாக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.