Saturday, July 27, 2024
Home > செய்திகள் > திமுக அமைச்சர் செய்த காரியம்..! கதறி அழுத மணிகண்டனின் தந்தை..!! கண்ணீரை வரவழைத்த வீடியோ..!

திமுக அமைச்சர் செய்த காரியம்..! கதறி அழுத மணிகண்டனின் தந்தை..!! கண்ணீரை வரவழைத்த வீடியோ..!

10-12-21/11.04am

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மணிகண்டன் வீடு திரும்பிய இரவே மூன்று முறை ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் மணிகண்டன் இறந்துவிட்டார் என மணிகண்டன் குடும்பத்தார் மற்றும் ஊர்வாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறயினரை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே முதுகுளத்தூர் தொகுதியை சேர்ந்த அமைச்சரான ராஜகண்ணப்பன் நேற்று மணிகண்டன் வீட்டிற்கு நேரடியாக சென்றார்.

அங்கு மணிகண்டனின் பெற்றோரிடம் பணத்தை ஒரு கவரில் வைத்து குடுக்க முயன்றார். அதை வாங்க மறுத்த குடும்பத்தினர் கேள்வியெழுப்ப தொடங்கினர். அதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டு வாசலில் அந்த பணத்தை வைத்துவிட்டு திரும்பினார். மேலும் அமைச்சரின் ஆதரவாளர்கள் மணிகண்டனின் கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக பணத்தை கொடுக்க முயன்றனர்.

`

அதை வாங்க மறுத்த அவரது தந்தை “உயிர்போய்விட்டது. அது திரும்ப வருமா. எங்களுக்கு நிதி வேண்டாம். நீதிதான் வேண்டும் ” என கூறினார். மேலும் மணிகண்டனின் தாயார் பேசுகையில் ” மீனவ பெண்ணை பேருந்திலிருந்து கீழே இறக்கியதற்கு ஸ்டாலின் கொந்தளித்து இருவரை பணி நீக்கம் செய்தார். ஆனால் இங்கே ஒரு உயிர் போய்விட்டது. அதை மறந்துவிட்டார்.” என கூறினார்.

```
```

மேலும் இதுகுறித்த கருத்துக்களை வெளியிட்ட மாரிதாஸ் எனும் எழுத்தாளர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா