Thursday, March 28, 2024
Home > செய்திகள் > கோவில் உண்டியலில் கொத்து கொத்தாக ஆணுறை..! சிக்கிய ஜான் தேவராஜ்..! காட்டி கொடுத்த சிசிடிவி

கோவில் உண்டியலில் கொத்து கொத்தாக ஆணுறை..! சிக்கிய ஜான் தேவராஜ்..! காட்டி கொடுத்த சிசிடிவி

31-12-21/10.26am

மங்களூரு : கர்நாடகா மாநிலம் மங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கோவில்களில் உள்ள உண்டியல்களில் மர்மநபர்கள் ஆணுறையை பல மாதங்களுக்கு மேலாக வீசி சென்றுள்ளனர்.

கடந்த டிசம்பர் 27ம் தேதி மங்களூரு அருகேயுள்ள கோரஜ்ஜன கட்டே எனும் கிராமத்தில் அமைந்துள்ள கோவில் உண்டியலில் மர்மநபர் ஒருவர் ஆணுறையை வீசிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் பல மாதங்களாக பல்வேறு கோவில்களில் நடைபெற்று வந்துள்ளது. கோவில் நிர்வாகங்கள் கொடுத்த புகாரின் பெயரில் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் கோரஜ்ஜன கட்டே கோவில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் 70 வயது மதிக்கத்தக்க ஒருநபர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவனை கண்டு பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் பெயர் ஜான் தேவராஜ் என்பதும் ஹூப்ளி பகுதியை சேர்ந்தவன் என்பதும் பல கோவில்களில் இதே போல ஆணுறையை வீசி சென்றதும் உறுதியானது.

`

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜான் கூறுகையில் “இயேசுவின் செய்தியை பரப்புவதற்காகவே நான் இந்த செயலை செய்தேன். இயேசுவை தவிர இந்த உலகத்தில் வேறு கடவுள்கள் இல்லை என பைபிள் சொல்கிறது. அசுத்தமான இடங்களுக்கு சரியான பரிசு ஆணுறை தான். அதனாலேயே அதை கோவில்களில் வீசுகிறேன்” என குறிப்பிட்டார்.

```
```

மேலும் அவரது வீட்டில் மாற்றுமதங்கள் பற்றிய தவறான வசனங்கள் கொண்ட பல கடிதங்கள் மற்றும் பயன்படுத்திய ஆணுறைகள் பலவற்றை போலீசார் கண்டறிந்துள்ளனர். இவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தீவிர கிறித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா