29-11-21/6.30am
மதுரை : பிஜேபி தலைவரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான டாக்டர் சரவணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு கூட்டத்தில் பேசுகையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். அண்ணாமலை ஒரு அயோக்கியன் எனவும் புறம்போக்கு எனவும் தான் ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்பதை மறந்து தரக்குறைவாக பேசியிருந்தார்.
இதற்க்கு தமிழக பிஜேபி சார்பில் பலத்த கண்டங்கள் எழுந்தது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிஜேபி தலைவரான டாக்டர் சரவணன் செய்தியாளர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தார். அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் சரவணன் கூறியதாவது,
” பாரத பிரதமர் மோடியையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு அரசியல் அகதி. காங்கிரஸ் தலைமையே அவரை புறம்தள்ளிவிட்டது. அவர் அரசியலில் இருக்கிறார் என்பதை காண்பிக்கவே கடுமையாக பேசி தான் இருப்பதை உணர்த்துகிறார். அவர் இனி மதுரையில் கால்வைக்க முடியாது.
ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவை தாக்குபவருக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்தது போல ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரையில் கால் வைத்தல் அவரை தாக்குபவருக்கு மதுரை பாஜக சார்பில் பணம் பரிசாக வழங்கப்படும்” என அதிரடியாக பேசினார்.
…..உங்கள் பீமா