Friday, March 29, 2024
Home > செய்திகள் > உடற்பயிற்சி செய்தபோது பிரிந்த உயிர்..!! கண்ணீரை வரவைத்த CCTV காட்சிகள்..!!

உடற்பயிற்சி செய்தபோது பிரிந்த உயிர்..!! கண்ணீரை வரவைத்த CCTV காட்சிகள்..!!

ஆண் பெண் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இது சமூக தேவையும் கூட. ஆனால் நடிகர் நடிகைகளை பார்த்து அவர்கள் போல சிக்ஸ் பேக் எயிட் பேக் என விபரீத முயற்சி எடுத்தால் அது நமக்கே கேடு விளைவிக்கும்.

பெரும் பணக்காரர்களும் நடிகர் நடிகைகளும் தங்கள் ஆரோக்கியத்தை கண்கணிக்க அதை கட்டுப்படுத்த என மருத்துவ ஆலோசகர்களை நியமித்து அவர்களின் ஆலோசனைக்கேற்ப செயல்படுகின்றனர். அவர்களது உணவு முறையும் சாமானியனின் உணவுமுறையும் வேறு.

உடல் ஆரோக்கியம் எப்படி முக்கியமோ அதைவிட உயிர் மிக முக்கியம். பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் அனைவரது உள்ளத்தையும் கனக்க வைத்துவிட்டது. பெங்களூருவை சேர்ந்த ஒரு இளைஞர் வழக்கமாக உடற்பயிற்சிக்கு செல்லும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு வெளியே வரும்போது உடல் அசதியாகி மாடிப் படியில் உட்காருகிறார்.

`

சில நொடிகள் நெஞ்சை தடவி ஆசுவாசப்படுத்திக்கொண்டு எழுந்து செல்கிறார். மீண்டும் நடக்க முடியாமல் அதே படிக்கட்டுகளில் அமர்ந்து அங்குமிங்கும் திரும்பிக்கொண்டிருக்கும்போதே சடாரென அவர் உயிர் பிரிந்து தலைகுப்புற விழும் காட்சி CCTVயில் பதிவாகியிருந்தது.

```
```

அதனை கண்ட குடியிருப்புவாசிகள் பதறி துடித்தனர். சிறிது நேரம் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில் “சினிமா மோகத்தில் இளைஞர்கள் தங்களது உடலை கட்டுப்ப்பாக வைக்க முனைகிறார்கள். ஆனால் ஆலோசனை இல்லாத கடும் உடற்பயிற்சியால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது.” என கூறுகின்றனர்.

pic credit : the hans india