Friday, March 29, 2024
Home > செய்திகள் > திமுக ஆட்சியில் அராஜகம்..! பறிபோன உயிர்..! பதறும் சொந்தங்கள்..!

திமுக ஆட்சியில் அராஜகம்..! பறிபோன உயிர்..! பதறும் சொந்தங்கள்..!

திமுக ஆட்சியில் மீண்டும் பாசிசம் தலைதூக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றனர். ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் தமிழகம் முழுவதும் 12 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். மேலும் இரு தினங்களுக்கு முன்பு வாழ்வாதார உரிமை கேட்டு போராடிய கூலித்தொழிலாளர்களை பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்தது உணவு கூட கொடுக்காமல் விட்டதாக பிஜேபியினர் ஆதாரத்துடன் புகார் செய்தனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு விடுதியில் வேலைபார்த்த சங்கரன்கோவிலை சேர்ந்த ஒருவரை காவல்துறை அடித்துக் கொன்றதாக செய்திகள் வருகிறது.

`

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி சேர்ந்த கட்டுச்சாமி என்பவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்துள்ள நிலையில் விடுதிக்கு திடீர் ஆய்வுக்கு வந்த காவலர்கள் தாக்கியதில் பலியானார்.இதை கண்டித்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

```
```

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவருடைய சடலம் வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை தரப்பில் பேச்சு நடைபெற்று வருகிறது.

…உங்கள் பீமா