Sunday, June 28, 2026
Home > செய்திகள் > நீதிபதிகள் அணிவது காவி ஜட்டியா..? கேரளாவில் வெடித்த சர்ச்சை..!

நீதிபதிகள் அணிவது காவி ஜட்டியா..? கேரளாவில் வெடித்த சர்ச்சை..!

கேரளா : கடந்த வாரம் ஆலப்புழாவில் நடந்த PFI கூட்டத்தில் ஒரு சிறுவன் ” ஹிந்துக்கள் தங்களது இறுதிமரியாதைக்கு அரிசியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். கிறித்தவர்களும் உங்களுடைய இறுதிமரியாதைக்கு தேவையானதை சேமித்துக்கொள்ளுங்கள். ஒழுங்காக நடந்து கொண்டால் எண்கள் நிலத்தில் நீங்கள் வாழலாம்” என பேசியிருந்தான்.



இந்த சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து சிலர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு PFI பேரணி அமைப்பாளர்கள் மீதும் தொடர்புடையவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளின்படி கேரள PFI தலைவரான யாஹியா தங்கல் ஆலப்புழாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியில் கூறியதாவது ” நீதிமன்றங்கள் எளிதில் அதிர்ச்சியடைகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலப்புழாவில் நடந்த பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம் என்ன தெரியுமா. அதன் காரணம் நீதிபதிகளின் உள்ளாடை (ஜட்டி) காவி நிறமாக இருப்பதுதான். அது காவிநிறத்தில் இருப்பதால்தான் எளிதில் சூடாகிவிடுகிறார்கள். அது உங்களை எரிச்சலூட்டுவதாய் உணர்வீர்கள். உங்களை தொந்தரவு செய்வதாய் உணர்வீர்கள்” என கூறியுள்ளார். ஏற்கனவே 21 ம் தேதி கிளம்பிய சர்ச்சையில் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்த நிலையில் மேலும் சிலர் கைதுசெய்யப்படலாம் என தெரிகிறது.


மேலும் PFI மாநில தலைவர் CP முகம்மது பஷீர் கடந்தவாரம் கூறுகையில் ” பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கம் ஆர்.எஸ்.எஸ் க்கு எதிரானது. எங்கள் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதத்தை அடக்கும் வரை ஓயாது” என கூறியிருந்தார். ஆனால் பினராயி விஜயனோ மாநிலத்தில் அமைதி நிலவுவதாகவும் இதுவரை இந்தியாவில் 486 இடங்களில் கிறித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறிவருகிறார்.