மௌலானாக்களோ இல்லை பாதிரியார்களோ கற்பழிப்பு செயலில் ஈடுபடும் போது இந்து சாமியார்களின் புகைப்படத்தை இடுகையிட்டு சாமியார் கற்பழித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் அதே ஊடகங்கள் ஒரு இஸ்லாமியரின் புகைப்படத்தை இடுகையிட்டால் உடனேயே மிரட்டல் விடப்படுகிறது. ஊடகங்களும் அமைதியாக சம்மந்தப்பட்ட புகைப்படத்தை அழித்துவிடுகிறது.
இதே போல ஒரு சம்பவம் தற்போது நடந்தேறியிருக்கிறது. NDTV கொரானா சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஒரு இஸ்லாமியர் கோவிட் டெஸ்ட் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதைக்கண்ட இஸ்லாமியர் சிலர் “இந்த புகைப்படத்தை வெளியிட்ட நிருபரின் பெயரை கூறுங்கள்” என மிரட்டும் தொனியில் சமூக ஊடகங்களில் பதிவிட, அரண்டு போன NDTV உடனேயே அந்த புகைப்படத்தோடு செய்தியையும் நீக்கிவிட்டது.
![](https://www.madrastelegram.com/wp-content/uploads/2021/08/sharjeel-warning.jpeg)
“இப்போது உங்கள் கருத்து சுதந்திரம் எங்கே போனது, உங்கள் பத்திரிகை தர்மம் எங்கே சென்றது, வேற்று மதத்தவர் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது இந்துக்களின் புகைப்படத்தை பயன்படுத்தும் ஊடகங்கள் ஏன் சிறுபான்மையினரை கண்டு அஞ்ச வேண்டும்..!?? ஊடகங்களின் நடுநிலை இவ்வளவுதானா” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இதுகுறித்து NDTV நிருபரை விளக்கம் கேட்க முயற்சித்தபோது எந்த பதிலும் வரவில்லை. NDTVயை ட்விட்டரில் மிரட்டும் தொனியில் பதிவிட்ட நபர் ஷர்ஜீல் உஸ்மானி. இவர் கலவர வழக்கில் குற்றவாளி என அறியப்பட்டவர். தற்போது ஜாமீனில் இருக்கிறார் என கூறப்படுகிறது..
…உங்கள் பீமா