Thursday, March 28, 2024
Home > செய்திகள் > இந்து முன்னணி அதிரடி…! அரசுக்கு நல்லபுத்தியை கொடு..!

இந்து முன்னணி அதிரடி…! அரசுக்கு நல்லபுத்தியை கொடு..!

திமுக தலைமையிலான தமிழக அரசு இந்துக்களின் பண்டிகையான விநாயகர்சதுர்த்தி விழாவை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்துக்களை கொந்தளிப்படைய செய்திருக்கிறது. பிஜேபி மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட பல இந்து அமைப்புகள் இந்த அறிவிப்பிற்கு எதிராக மக்களின் சார்பில் குரல்கொடுத்து வருகின்றன.

தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை கூறுகையில், ” டாஸ்மாக்கிற்கு காவல்துறை பந்தோபஸ்து அளிக்கும்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அளிக்க முடியாதா. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்தே தீரும்” என கூறியுள்ளார்.

இன்று இந்து முன்னணி சார்பில் ” விநாயக சதுர்த்தி பண்டிகைக்கு விதித்த தடையை நீக்க கோரியும் தமிழக அரசுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இந்து முன்னணியினர் வழிபட்டுவருகின்றனர். ஊட்டி பொள்ளாச்சி, காரைக்குடி கடலூர் பொள்ளாச்சி மற்றும் தென்சென்னை ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி தொண்டர்கள் கோவில்களில் கூடி வருகின்றனர்.

`

இந்துமுன்னணியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “தடை அதை உடை “விநாயகர்சதுர்த்தி 2021″ தமிழக அரசுக்கு நல்ல புத்தியை கொடு ” என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

```
```

…உங்கள் பீமா