Saturday, July 27, 2024
Home > செய்திகள் > ஹிஜாப் அணிய சொல்லி இந்து பெண்களை கட்டாயப்படுத்திய ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு..!

ஹிஜாப் அணிய சொல்லி இந்து பெண்களை கட்டாயப்படுத்திய ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு..!

சிவசேனா ஆளும் மஹாராஷ்டிராவில் தினம் ஒரு கொடுமை அரங்கேறி வருகிறது. மிக சமீபத்தில் நகராட்சி துணை ஆணையர் விரல்களையே ஒரு கும்பல் பட்டப்பகலில் வெட்டியது. ஒரு தொழிலதிபரை சிவசேனா கும்பல் வெறித்தனமாக தாக்கியது. தொலைக்காட்சி விவாதத்தில் பிஜேபி தலைவர் சம்பித் பத்ராவை தாக்குவோம் தடுக்க யார் வந்தாலும் தாக்குவோம் என நேரலையிலேயே சிவசேனா தலைவர் ஒருவர் பொங்கி எழுந்தார்.

இது இப்படி இருக்க பால் தாக்கரேவின் கனவுக்கு பால் ஊற்றும் வகையில் உத்தவ் தாக்ரேவின் செயல்பாடுகள் இருப்பதாக மஹாராஷ்டிரா மக்கள் புலம்பி வருகின்றனர். நேற்று நாக்பூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை சேர்ந்த பல பெண்கள் சாலைகளில் வரும் இந்து பெண்களை ஹிஜாப் அணியச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

`

மேலும் பல பெண்களுக்கு வற்புறுத்தி ஹிஜாப் அணிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து அந்த இடத்தில் பொதுமக்கள் கூடினர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் பெண்கள் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

```
```

இதையடுத்து சதார் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. பின்னர் அந்த இஸ்லாமிய அமைப்பு பெண்கள் பத்திரமாக காவல்துறையினரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய பொதுமக்களில் சிலர் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர். இந்த அமைப்பு போல சில அமைப்புகள் தினம் தினம் இதே செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அரசு கண்டிக்க வேண்டும் என கருத்துக்களை முன்வைத்தனர்.

..உங்கள் பீமா