Saturday, July 27, 2024
Home > செய்திகள் > அடாவடி கைது..? தட்டிக்கேட்ட கிராம மக்கள் கூண்டோடு கைது..?புதுக்கோட்டையில் பரபரப்பு

அடாவடி கைது..? தட்டிக்கேட்ட கிராம மக்கள் கூண்டோடு கைது..?புதுக்கோட்டையில் பரபரப்பு

30-1-22/15.30pm

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரை நேற்று நள்ளிரவில் வழக்கம்போல வீடு புகுந்து அத்துமீறி காவல்துறை கைதுசெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திம்மயம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீ கணேஷ் பாபு. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட பிரிவினரால் மற்றொரு பிரிவினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக இலுப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

மேலும் மதமாற்றம் செய்யும் மிஷனரிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கணேஷ் பாபுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறை வீட்டை சேதப்படுத்தி கணேஷ் பாபுவை அடாவடியாக கைது செய்து இலுப்பூர் காவல்நிலையத்தில் அவரை சிறைவைத்துள்ளது. தகவலறிந்த பிஜேபியினர் மற்றும் இந்து அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

`

இலுப்பூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் உஷா நந்தினி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாகவும் மதமாற்றத்தை தடுத்த காரணத்திற்க்காக கணேஷை கைதுசெய்திருப்பதாகவும் திம்மயம்பட்டி கிராமமக்கள் கணேஷுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர். இதனிடையே பிஜேபியினர் இலுப்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பிஜேபியினரை காவல்துறை கைது செய்துள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டத்தில் பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜா கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

```
```

…..உங்கள் பீமா