Friday, March 29, 2024
Home > செய்திகள் > வீட்டை மசூதியாக்க முயற்சி..! போராட்டத்தில் இறங்கிய ஹெச்.ராஜா

வீட்டை மசூதியாக்க முயற்சி..! போராட்டத்தில் இறங்கிய ஹெச்.ராஜா

4-4-22/16.22PM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீடுகட்டுவதற்கு அனுமதிவாங்கிவிட்டு மசூதி எழுப்பப்பட்டு வருகிறது.இதை எதிர்த்து ஹெச்.ராஜா தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு பகுதியில் வசிப்பவர் முகம்மது அலி. இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சம்சுல் பீவி எனவராது பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார். அதோடு விளைநிலத்தில் ஒரு கட்டிடம் எழுப்பினார். அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் கோபுரங்கள் அமைத்து மசூதி போல மாற்றியமைத்தார்.

இதற்கு கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபியினர் போராட்டம் நடத்தினர். அதையடுத்து டிசம்பர் 2021க்குள் மசூதி போல அமைக்கப்பட்ட அந்த அமைப்பு அகற்றப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அந்த மசூதி அமைப்பு அகற்றப்படவில்லை. இதை கண்டித்து அகற்றக்கோரி ஹெச்.ராஜா தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

`

மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோவிலில் இருந்து தொடர்புடைய கட்டிடத்தை அகற்ற கோரி ஊர்வலமாக பிஜேபியினர் சென்றனர். அப்போது ஆலங்குடி காவல்துணை கண்காணிப்பாளர் வடிவேல் தலைமையிலான காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.மேலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல் 12ம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவரே இடித்துக்கொள்வது இல்லையெனில் அதன்பிறகு இடித்து அகற்றப்படும் என உறுதியளித்தனர்.

```
```

இதையடுத்து ஹெச்.ராஜா தலைமையிலான குழு கலைந்துசென்றது. இந்த திடீர் ஊர்வலத்தால் கீரமங்கலம் மேற்பனைக்காடு சாலையில் இரண்டுமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

…..உங்கள் பீமா