Saturday, July 27, 2024
Home > அரசியல் > பால்வளத்துறை அமைச்சரின் பலான பேச்சு..! வெளியான வீடியோ..!

பால்வளத்துறை அமைச்சரின் பலான பேச்சு..! வெளியான வீடியோ..!

24-11-21/10.10am

சென்னை : திமுக அரசின் பிரதிநிதிகள் யாரும் ஊடகங்களை மதிப்பதில்லை என்பதற்கு பல உதாரணங்களை எடுத்து கூறலாம். நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சரின் பலான பேச்சை கேட்டும் ஊடகங்கள் அமைதியாய் இருந்தது ஆச்சர்யத்தை வரவழைத்தது.

சில மாதங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் திமுக பிரமுகர் ஆர்எஸ். பாரதி ” தலித்துகளுக்கு நாங்கள் போட்ட பிச்சை இப்போது நீதிபதிகளாகவும் அரசு அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். ஊடகங்களுக்கும் விபசாரிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஊடகங்களெல்லாம் விபச்சாரிகள்” என ஊடகங்களின் மத்தியில் பலத்த ஆக்ரோஷமாக கூறினார்.

ஆர்எஸ்பி கூறியதை போல அந்த சொற்களையும் தங்களுக்கு கிடைத்த விலைமதிக்க முடியாத பொக்கிஷம் போல கருதி சந்தோசமாய் ஊடகங்கள் ஏற்றுக் கொண்டன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்க்க முழு முதற்காரணம் ஊடகங்களே. அந்த நன்றியை உணராமல் மேலும் மேலும் ஊடகங்களை திமுகவினர் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றனர்.

`

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் நாசர் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் நாசர் ஊடக நிருபர் ஒருவரை தரக்குறைவாக பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

```
```

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் நேரு ஊடகங்களை வசை பாடியது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து ஊடகங்கள் திமுகவினரால் அவமானப்படுத்தப்பட்டாலும் தங்கள் கடமையிலிருந்து ஒருபோதும் பிறழாமல் திமுகவுக்கு ஆதரவாகவே ஊடகங்கள் செயல்படுகின்றன என்பது ஊடக உலகின் தனி சிறப்பு.

…..உங்கள் பீமா