Friday, March 29, 2024
Home > அரசியல் > பதின்மூன்றாயிரம் கோடி எங்கே..? திமுகவுக்கு புதிய தமிழகம் கிடுக்கிப்பிடி கேள்வி….!

பதின்மூன்றாயிரம் கோடி எங்கே..? திமுகவுக்கு புதிய தமிழகம் கிடுக்கிப்பிடி கேள்வி….!

12-11-21/ 6.35am

சென்னை : சென்னையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திமுக அரசுக்கு வழங்கப்பட்ட பதின்மூன்றாயிரம் கோடி என்ன ஆனது என கேள்வியெழுப்பியுள்ளது புதிய தமிழகம் கட்சி.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்
“திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், வாக்குறுதிப்படி ஆறு ஓடுகிறது. அது பாலாறும் தேனாறுமாக அல்ல. சென்னையில் உள்ள சாலைகளே ஆறாகி ஓடுகின்றன” என தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஒரு படி மேலே போய் திமுகவை வெளுத்து வாங்கிவிட்டார். அவர் தனது
அறிக்கையில் “1967-லிருந்த ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளினுடைய ஆட்சியின் அலங்கோலம் தான் இன்று சென்னை வெளிக்காட்டும் வெள்ள அடையாளம். தலைநகரில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு சில மேம்பாலங்களை மட்டுமே கட்டி, அதை மட்டுமே பொதுமக்களுக்குக் காட்டி ஓட்டுக்களை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்ததன் விளைவு.

`

சென்னையின் கட்டமைப்பு வசதிகளைச் சர்வதேச அளவிற்கு உயர்த்த, 2006-2011 மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியிலிருந்தபோது 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதன் மூலம் அன்றைய திமுக அரசு எந்தந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

அதேபோல 2011-க்கு பிறகு 2021 வரை ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை எடப்பாடி அரசு என்ன செய்தது? என்பதும் தெரியவில்லை. இந்த வெள்ள காலத்திலும் மக்களின் துயர் துடைக்க செயல்படாமல் வெறும் விளம்பரத்தில் ஈடுபடுவது உகந்தது அல்ல. அருவருப்பை உண்டாக்கும் விளம்பர மோகத்தை விட்டுவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்களின் துயர் துடைக்கு நீங்களும் உங்கள் சாகாக்களும் அரசு இயந்திரங்களையும் ஈடுபடுத்துங்கள்.

```
```

சென்னையில் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உலகிற்கே தெரியும். முதல்வர் வீதி வீதியாக ஆய்வு செய்து தெரிய வேண்டும் என்பதில்லை. இது திமுகவின் விளம்பரம் மோகத்திற்கும், வரவுள்ள மாநகராட்சி தேர்தலுக்கு போட்டோ காட்டுவதற்கும் உதவுமே தவிர தத்தளிக்கும் மக்களுக்கு உதவாது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவினரின் கேள்விக்கு பதிலளிக்கையில் “முழங்கால் தண்ணீரில் ஷூட்டிங்கு, வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை நிற்கவைத்து ரொட்டி பாக்கெடு கொடுத்து படம் எடுப்பதே ஹீரோயிஸமாக நினைக்கும் இது போன்ற அடிமாட்டு மூளைகள் இருக்கும் வரை, நகரத்தின் கட்டமைப்பு சீர்படுத்துதல், நிரந்தர தீர்வை பற்றி திராவிட ஸ்டாகிஸ்டுகள் எதற்கு யோசிக்கனும்?” என விமர்சித்துள்ளார்.

……உங்கள் பீமா