Friday, April 19, 2024
Home > அரசியல் > முதல்வர் முக ஸ்டாலினுக்கு புதுப்பெயர் சூட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்..!

முதல்வர் முக ஸ்டாலினுக்கு புதுப்பெயர் சூட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்..!

12-11-21/5.58am

சென்னை : திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை புதுப்பெயர் சூட்டி கிண்டலடித்திருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர்.

சென்னையில் பெய்த கனமழையால் நகரின் முக்கியமான பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர். மேலும் நிவாரணப்பொருட்கள் கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் திமுக அரசை திட்டித்தீர்ப்பதை காண முடிகிறது.

திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் சாப்பாட்டு கூடம் மற்றும் வெள்ளம் வடிந்த பகுதிகளை மட்டுமே பார்வையிடுகிறார் என பரவலான குற்றசாட்டு எழுந்துள்ளது.

`

அமைச்சர்கள் சேகர்பாபு உட்பட சிலர் மற்றும் முதல்வர் போகும் இடமெல்லாம் பின்தொடர்வதாக கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது பதிவில்,” மலை வெள்ளத்தில் மக்கள் துயரப்படும் நேரத்தில் துப்பறியும் சங்கர்லால் போல உடையணிந்து சென்னை தெருக்களில் உலா வருகிறார்.

```
```

சமையல் கூடங்களை துப்பறிகிறார். சாம்பார் சாதத்தை துப்பறிகிறார். பிரச்சார படம் எடுக்கும் நேரமா இது.பாவம் நமது ஏழை மக்கள்” என பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இது நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

….உங்கள் பீமா