Monday, May 19, 2025
Home > அரசியல் > முதல்வர் முக ஸ்டாலின் மீது திமுக அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

முதல்வர் முக ஸ்டாலின் மீது திமுக அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

13-11-21/ 11.30am

சென்னை ; சென்னையில் பெய்த மழையை பேரிடராக கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள 300 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக அமைச்சர் முதல்வர் முக ஸ்டாலின் மீது மறைமுக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

வருடந்தோறும் பேரிடர் நிவாரணநிதியாக மத்திய மோடி அரசு 1360 கோடி வழங்கி வருகிறது. இந்த 2020-21க்கான நிவாரண நிதி 1020 கோடியை ஜூலை 31 அன்று வாங்கிவிட்டது. மீதமுள்ள 340 கோடியை மாநில அரசே வழங்க வேண்டும். ஆனால் 300 கோடி பேரிடர் நிவாரண நிதி நிலுவையில் உள்ளது என வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமசந்திரன் மறைமுகமாக திமுக அரசை சாடியுள்ளார்.

தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமசந்திரன் “தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆண்டுக்கு ₹1,360 கோடியை ஒன்றிய அரசு தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான (2020-21) ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதியில் ₹300 கோடி நிலுவையில் உள்ளது” என முதல்வர் முக ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

`

இதுகுறித்து தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவிக்கையில் “மாண்புமிகு அமைச்சர் அவர்களே தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி.

```
```

2020-21 ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி-1,360 கோடி. இதில் மத்திய அரசு தனது பங்கான 1020 கோடியை ஜூலை 31 ஆம் தேதி அளித்துவிட்டது. நம்முடைய மாநில அரசு கொடுக்காத 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம் முறையிட்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய புரிதலுக்காக சில குறிப்புகள் இணைத்துள்ளேன். நன்றி. வணக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா