Saturday, July 27, 2024
Home > செய்திகள் > அயோத்தியில் சோகம்..! மூன்று பேர் பரிதாப பலி..!

அயோத்தியில் சோகம்..! மூன்று பேர் பரிதாப பலி..!

5-4-22/14.11PM

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசம் அயோத்தியில் தனியாருக்கு சொந்தமான இரண்டடுக்கு பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

டெல்லியில் இருந்து பஸ்தி மற்றும் சித்தார்த் நகர் செல்லும் இரண்டடுக்கு தனியார் பேருந்து ஒன்று கண்டோன்மெண்ட் காவல்நிலையத்திற்குட்பட்ட மும்தாஜ் நகர் அருகே காலை 7.30 மணியளவில் லக்னோ கோரக்பூர் தேசியநெடுஞ்சாலையில் இன்னொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது. அப்போது நிலைதடுமாறிய பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சித்தார்த் நகரை சேர்ந்த ரமேஷ் (35) உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமிருவர் அடையாளத்தை காண முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காயமடைந்த 30 பேரை மீட்ட தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் பைசாபாத் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதில் 12பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

`

மீதி பேர் முதலுதவி அளிக்கப்பட்டு வழியனுப்பிவைக்கப்பட்டதாக பைசாபாத் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் எஸ்.ஹெச்.ஓ அருண் பிரதாப் சிங் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விபத்தால் போக்குவரத்து சிலமணிநேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

```
```

உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்த முதல்வர் யோகி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.எஸ்.பி ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆணையிட்டார்.

….உங்கள் பீமா