Thursday, March 28, 2024
Home > அரசியல் > நீதி கிடைக்கும் வரை விடமாட்டோம்..! அதிரடி காட்டிய விஜயசாந்தி..!

நீதி கிடைக்கும் வரை விடமாட்டோம்..! அதிரடி காட்டிய விஜயசாந்தி..!

02-02-2022/13.30pm

சென்னை : அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டு அதன்பேரில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது.

இதனிடையே பிஜேபி தேசிய தலைமை மைக்கேல்பட்டிக்கு உண்மை கண்டறியும் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த குழுவில் விஜயசாந்தி இடம்பெற்றுள்ளார். அவர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்தார். முதல்வர் இந்த சம்பவத்தை பாஜக அரசியலாக்குகிறது என குறிப்பிட்டதை நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

விஜயசாந்தி அவர்கள் பதிலளிக்கையில் ” இங்கே யாரும் அரசியல் செய்யவில்லை. மாணவியின் இறப்புக்கு நீதிவேண்டும்.

`

நியாயப்படி இந்த பிரச்சினையை முதல்வர் தனது தோளில் போட்டுகொண்டு இறந்த மாணவியின் குடும்பத்திற்காக குரல் கொடுக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க போராடுகிறோம்.

```
```

இதில் அரசியல் எங்கே இருக்கிறது. இறந்த மாணவி வீடியோ வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வீடியோ போலி என்கிறீர்களா. இந்த விவகாரத்தில் முக ஸ்டாலின் யாரை காப்பற்ற நினைக்கிறார். இந்த மாணவிக்கு நடந்த சம்பவம் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். முதல்வர் அமைதி காப்பது ஏன் என ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு அறிக்கையும் அவர் வெளியிடவில்லை என்பது யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது.” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

…..உங்கள் பீமா