Thursday, March 28, 2024
Home > அரசியல் > இதுதாண்டா போலீஸ்..! திமுக அமைச்சர் சேகர் பாபுவை அலறவிட்ட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

இதுதாண்டா போலீஸ்..! திமுக அமைச்சர் சேகர் பாபுவை அலறவிட்ட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

29-11-21/ 13.25pm

சென்னை : திமுக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதற்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர் அமைச்சரின் உடல் மொழியை கண்டறிந்து பேசியது அவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதை மீண்டும் நிரூபித்தது.

நேற்று முன்தினம் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் திமுக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு ” யாரு அண்ணாமலை எனக்கு தெரியாதே. ஓ பிஜேபி அண்ணாமலையா. 2026 இல் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை. இது திராவிட பூமி. இது பெரியார் மண். 2026ல் மட்டுமில்லை இனி இந்த மண்ணில் எப்போதுமே திமுக தான்.” என கூறினார்.

`

இதற்க்கு பதிலடியாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ” அண்ணாமலை யாரென்றே தெரியாது என அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார். சேகர் பாபு பயந்துவிட்டார். அவர் பயத்தை நான் அவரது பேச்சில் பார்க்கவில்லை. அவரது உடலசைவில் பார்க்கிறேன். உடல் மொழியில் பார்க்கிறேன். எப்பொழுதும் பத்திரிக்கையாளர்களை தைரியமாக சந்திக்கும் சேகர்பாபு தடுமாறியிருக்கிறார்.

```
```

பத்திரிக்கையாளர்களை சந்தித்த உடன் அவரே ஏதாவது கேள்வி இருக்கிறதா என கேட்பார். ஆனால் தற்போது அவர் பேச மறுக்கிறார். அவரது பயத்தை அவரது உடல்மொழியே காட்டிக்கொடுக்கிறது.” என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் பேசும் வார்த்தைகளை மட்டுமல்ல உடலசைவுகளையும் சரியாக கணிப்பார்கள் என்பதை அண்ணாமலை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளார்.

…..உங்கள் பீமா