10-3-22/13.39pm
உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச தேர்தல் முடிவுகளில் பிஜேபி 267 இடங்களில் ஒரு மணி நிலவரப்படி முன்னிலை வகிக்கிறது. இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆட்சியமைக்க உள்ளார்.

இந்த தேர்தலில் பிஜேபி மற்றும் யோகி கூட்டணி சத்தமில்லாமல் ஏழு சாதனைகளை படைத்துள்ளது. ஐந்துவருட பதவிக்காலத்தை நிறைவு செய்து மீண்டும் முதல்வராகிறார் யோகி அவர்கள். இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக கருதப்படும் உத்திரபிரதேசத்தில் முதல் சட்டமன்றம் 1952 மேமாதம் உருவாக்கப்பட்டது. 70 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் இதுவரை 21முதல்வர்களை கண்ட இந்த மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவிக்காலத்தை நிறைவுசெய்து இரண்டாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்பது யோகி மட்டுமே.

மாநிலத்தில் இதுவரை ஐந்து முதல்வர்கள் மட்டுமே இரண்டாம் முறை பதவியேற்றிருக்கின்றனர்.1957ல் சம்பூர்ணானந்தா, 1962ல் சந்திரபானு குப்தா, 1974ல் ஹேமவதி நந்தன், 1985ல் நாராயண் தத் திவாரி ஆகியோருடன் யோகியும் சேர்கிறார்.
1985ல் பிரிக்கப்படாத உத்திரபிரதேசத்தில் காங்கிரசின் திவாரி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது யோகியும் இரண்டாவதுமுறையாக பதவியேற்றுக்கொள்ள இருக்கிறார்.
இதுவரை நான்கு பிஜேபி முதல்வர்களை உத்திரபிரதேசம் சந்தித்துள்ளது. கல்யாண்சிங்,ராம்பிரகாஷ் குப்தா, ராஜ்நாத்சிங் ஆகியோர் முதல்வராக இருந்தாலும் இரண்டாவது முறையாக பதவியேற்பது யோகி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கோரக்பூர் தொகுதியில் இதுவரை எம்பியாக மட்டுமே இருந்த யோகி ஆதித்யநாத் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

70 ஆண்டுகளில் பதவிவகித்த 21 முதல்வர்களில் மூன்று முதல்வர்கள் மட்டுமே முழுமையான பதவிக்காலத்தை முடித்திருக்கின்றனர். மாயாவதி(2007-12) அகிலேஷ் யாதவ் (2012-2017) ஆகியோரை தொடர்ந்து யோகி அவர்கள் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடித்திருக்கிறார்.

மேலும் தமிழகத்தில் தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு செல்லும் அரசியல்வாதிகள் பதவியிழப்பார்கள் என அஞ்சப்படுவது போல நொய்டா செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது. ஆனால் நொய்டா ஜிங்க்ஸை உடைத்த முதல் அரசியல்வாதி பிரதமர் மோடி. டிசம்பர் 25 2018ல் டெல்லி மெட்ரோ மெஜந்தாவை திறந்துவைக்க நொய்டா சென்றார் மோடி. அவருடன் யோகியும் சென்றிருந்தார்.
2019 தேர்தலில் மோடி தோற்றுப்போவார் என எதிர்க்கட்சிகள் ஆருடம் கூற மாபெரும் வெற்றியடைந்தார் பிரதமர் மோடி. மேலும் அதேபோல யோகியும் தற்போது நொய்டா ஜிங்க்ஸை உடைத்துள்ளார். 1988ல் ஜூன் மாதத்தில் அப்போதைய முதல்வர் வீர் பகதூர் சிங் நொய்டா சென்றார். அங்கிருந்து வந்த சில நாட்களிலேயே பதவியிழந்தார். அதேபோல மாயாவதி 2011 அக்டோபரில் தலித் ஸ்மார்க் ஸ்டால் திறக்க நொய்டா சென்றார். 2012 தேர்தலில் தோல்வியடைந்தார். அதையடுத்து ராஜ்நாத்சிங் முதல் அகிலேஷ் வரை அனைவரும் அங்குசெல்லாமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்சொன்னவை போல பல சாதனைகளை தகர்த்தெறிந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை மெட்றாஸ் டெலெக்ராம் குழுமம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம்.
…..உங்கள் பீமா