Friday, March 29, 2024
Home > அரசியல் > திமுக நிதியமைச்சர் போட்ட ட்வீட்..! பஞ்சராக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

திமுக நிதியமைச்சர் போட்ட ட்வீட்..! பஞ்சராக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

21-11-21/17.51pm

சென்னை : செய்தியை திரித்துக் கூறிய புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தையும் வக்காலத்து வாங்கிய திமுக நிதியமைச்சரையும் வெளுத்து வாங்கினார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை அவர்கள் பேசியதாக கூறி செய்தி வெளியிட்ட புதியதலைமுறைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பிஜேபி சார்பில் நவம்பர் 22ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பிஜேபி தலைவர் பேட்டியளித்ததாக செய்தி வெளியிட்டிருக்கிறது புதிய தலைமுறை.

இந்த செய்தியை பகிர்ந்த தமிழக நிதியமைச்சர் “என்னது விலை உயர்வை கண்டித்து போராட்டமா. ஆனால் அதற்க்கு முழு காரணம் வரி உயர்வு தானே. அதுவும் அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவும் தானே செய்தன. அப்போது ஒரு கட்சியின் மாநில தலைவர் சொந்த கட்சியின் தேசிய தலைமையையும் கூட்டாளிகளையும் கண்டிக்கிறாரா” என பதிவிட்டுள்ளார்.

`

இதற்க்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ” புதியதலைமுறை தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த போராட்டம் அறிவாலய அரசின் பொய்களுக்கும் அடிப்படையே இல்லாத விவாதங்களையும் எதிர்த்தே. மேலும் தமிழக திருக அரசு பெட்ரோல் விலையை குறைக்கததால் நடத்தப்படும் போராட்டம்.

மத்திய அரசு பிப்ரவரி ஒண்ணாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. அறிவாலய அரசு 13 மார்ச் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு நான்கு ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது. 22 மாநிலங்கள் வாட் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைத்திருக்கிறது.

```
```

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனில் உறுதியாக போராட்டம் நடக்கும்” என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரு சேர புதிய தலைமுறை செய்தி நிறுவனம் மற்றும் தமிழக நிதியமைச்சர் இருவருக்கும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல பதிலளித்திருக்கிறார் தமிழக பிஜேபி தலைவர்.

……உங்கள் பீமா