Saturday, July 27, 2024
Home > செய்திகள் > பரிதவிக்கும் சென்னை..! கைவிட்ட திமுக..! கை கொடுத்த அண்ணாமலை..!

பரிதவிக்கும் சென்னை..! கைவிட்ட திமுக..! கை கொடுத்த அண்ணாமலை..!

9-11-21/ 13.40pm

சென்னை : சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் யாரும் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சந்திக்கவில்லை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிஜேபி தலைவர்கள் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழக அரசு 139 நிவாரண முகாம் சென்னையில் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறது. ஆனால் அதுபற்றிய தகவல்களோ அல்லது இடங்களின் குறிப்புகளோ வெளியிடப்படவில்லை.

இதனிடையே மக்களை சந்தித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அண்ணாமலை மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உணவு கிடைக்க தி-நகரில் அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தை பார்வையிட்டார்.

`

மேலும் நிவாரண எண்களை அறிவித்துள்ளார். “மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உணவு கிடைக்க தமிழ்நாடு பிஜேபி சார்பில் சென்னை தி நகரில் சமையல் கூடம் அமைத்து பாஜக தொண்டர்களால் உணவு சமைக்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள பாஜக வெள்ள நிவாரண உதவி எண்கள் 9150021830, 9150021831” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

```
```

…..உங்கள் பீமா