Saturday, July 27, 2024
Home > செய்திகள் > யுவ மோர்ச்சா தலைவர் மரணத்தில் மர்மம்..! போராடும் பிஜேபி..!

யுவ மோர்ச்சா தலைவர் மரணத்தில் மர்மம்..! போராடும் பிஜேபி..!

07-01-22/17.10pm

மேற்குவங்கம் : கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் நடைபெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. மேற்குவங்கம் அரசியல் கொலைகள் நடக்கும் மாநிலங்களில் முதலிடத்தை பிடித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மமதா ஆட்சியமைத்த பின்னர் அரசியல் பழிவாங்கல் கொலைகள் குறையலாம் என கணித்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பிஜேபியினர் தேடித்தேடி வேட்டையாடப்படுவதாக பிஜேபி மேற்குவங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் யுவமோர்ச்சா லோக்கல் கமிட்டி தலைவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

`

மேற்குவங்கம் அலிபுரத்துவார் மாவட்டம் பஞ்சகுமாரி பகுதி காக்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஷுவ்ரோ ஜ்யோதி கோஷ். வயது 22. இவர் பாரதீய ஜனதா கட்சி இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சா லோக்கல் கமிட்டி குழு தலைவராக இருக்கிறார். இவர் கடந்த செவ்வாயன்று இரவு வீட்டிலிருந்து கிளம்பியவர் காணாமல் போனார். அதற்க்கு அடுத்த நாளே வீட்டின் அருகே இருந்த மூங்கில் காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

```
```

இந்த மரணத்தில் திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்களின் சதி இருக்கும். அவர்கள் தான் கொன்று தற்கொலை போல நாடகமாடுகிறார்கள் என கூறி பிஜேபியினர் பக்சா பீடர் சாலையை வழிமறித்து போராட்டத்தில் இறங்கினர். அதையடுத்து போலீசார் அவர்களை விரட்ட முற்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும்வரை போராட்டத்தை விளக்கமாட்டோம் என கூறிய பிஜேபியினரை போலீசார் நடவடிக்கை எடுக்கிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

…..உங்கள் பீமா