28-3-22/8.19AM
பிஹார் : பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த ஊரில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்டார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
நேற்று மாலை பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் சென்றார். அங்குள்ள சபர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரபோராட்ட வீரரான ஷில்பத்ரா யாஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவர் சிலைக்கு அருகில் சென்ற போது மர்ம நபர் ஒருவர் பின்னாலிலிருந்து சராமரியாக தாக்கினார்.
அதற்குள் சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை பிடித்து இழுத்துச்சென்றனர். அதை கவனித்த முதல்வர் “அவரை அடிக்காதீர்கள். அவர் நோக்கம் என்ன சொல்ல வேண்டும் என கண்டுபிடியுங்கள்” என உத்தரவிட்டார். பின்னர் அவரது அடையாளம் கண்டறியப்பட்டது. அவர் பெயர் சங்கர் ஷா என்பதும் அபு முகம்மது புர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது.
அந்த பகுதியில் அவர் நகைக்கடை நடத்திவருவதும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் பாட்னா காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரை வீட்டிலேயே பூட்டி வைத்திருந்திருக்கிறார்கள். நேற்று அவரது குடும்பத்தினர் இல்லாதபோது தப்பித்து வெளியில் வந்ததாக தெரிகிறது. பாதுகாப்பு குளறுபடி காரணமாக நடந்த இந்த சம்பவத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஜனாதிபதி மீது தாக்குதல் முயற்சி பிரதமர் மீது தாக்குதல் முயற்சி மற்றும் கேரள முதல்வர் பினராயி மீது தாக்குதல் முயற்சி என அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் பாதுகாப்பு அதிகாரிகளின் திறமை குறித்து சந்தேகத்தை விளைவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா