Saturday, July 27, 2024
Home > செய்திகள் > கோவிலை காப்பாற்ற வரமாட்டீர்களா..? பக்தர்கள் கண்ணீர்..! பரிதாபத்தை வரவழைக்கும் வீடியோக்கள்..!

கோவிலை காப்பாற்ற வரமாட்டீர்களா..? பக்தர்கள் கண்ணீர்..! பரிதாபத்தை வரவழைக்கும் வீடியோக்கள்..!

20-12-21/11.16am

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோவில். இந்த ஆஞ்சநேயர் 10 வருடங்களுக்கு மேலாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என கூறப்பட்டாலும் கடந்த பல வருடங்களாக மாத வாடகை கோவில் நிர்வாகத்தரப்பிலிருந்து அரசுக்கு கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

மேலும் மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதியும் கடந்த அதிமுக அரசால் ஏற்படுத்தி தரப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்குவதாய் இரண்டுவருடங்களுக்கு மேல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி திடீரென குன்றத்தூர் தாசில்தார் முன்னிலையில் கோவிலை தகர்க்க பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டது.

நிர்வாகத்தினர் மற்றும் பெண் பக்தர்கள் கால அவகாசம் கேட்க அதை ஏற்ற அதிகாரிகள் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இரவு முழுவதும் பெண்பக்தர்கள் அழுதபடியே கோவிலை பாதுகாத்துக் கொண்டு தூங்காமல் கண்விழித்து பார்த்துக்கொண்டிருப்பது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

`

மேலும் இன்று நீதிமன்றத்தில் நிர்வாக தரப்பில் கோவிலை இடிக்க இடைக்கால தடை கேட்டு அணுகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பக்தர்களே ஒன்று கூடுங்கள் என கோவிலில் பாதுகாப்பிற்கு நிற்கும் சிலர் குரல்கொடுத்தும் யாரும் செல்லாமல் பதுங்கிக் கொண்டிருப்பது இது திராவிட பூமி என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

```
```

மேலும் கோவில் சார்பாக பேசிய பக்தர்கள் ” பிஜேபி அதிமுக என கட்சி பாகுபாடில்லாமல் தொண்டர்கள் திரண்டு வந்து ஆதரவு கொடுத்தாலே கோவிலை காப்பாற்றிவிடலாம். இங்கே சில பெண்பக்தர்கள் மட்டுமே ஆஞ்சநேயருக்கு பாதுகாப்பாக இருக்கின்றனர். நமது ஒற்றுமையை இதில் காட்டாமல் எதில் வெற்றி காணப்போகிறோம். அனைத்து பக்தர்களும் திரண்டு வாருங்கள்” என கூறினர்.

…..உங்கள் பீமா