Saturday, July 27, 2024
Home > செய்திகள் > மதரஸாவில் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! உருது ஆசிரியர் கைது..!

மதரஸாவில் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! உருது ஆசிரியர் கைது..!

17-11-21/ 13.05pm

கோட்டா : மதரஸாவில் உருது பயில சென்ற சிறுமியை உருது ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் ஏறிய நாளிலிருந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜஸ்தானில் கற்பழிப்பு குற்றங்கள் இந்தியாவிலேயே அதிகம் நடைபெறும் மாநிலம் என குறிப்பிட்டிருந்தது.

மேலும் தலித்துக்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலை என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுபோய் இருப்பதாக முன்னாள் முதல்வர் வசுந்தரா தெரிவித்தார். இந்நிலையில் கோட்டா மாவட்டம் கோட்சுவா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மதரஸா ஒன்று செயல்பட்டு வருகிறது.

`

இங்கு 43 வயதுடைய அப்துல் ரஹீம் என்பவர் உருது ஆசிரியராக பணிபுரிகிறார். இதே கிராமத்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி மதரஸாவில் உருது கற்றுக்கொள்ள வந்திருக்கிறார். அந்த சிறுமியை ரஹீம் பாலியல் பலாதிகாரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து அழுதுகொண்டே விவரிக்க,

பெற்றோர்கள் கடந்த ஞாயிறன்று ராம்புராவில் வசிக்கும் காபித்தூள் ரஹீம் மீது கோட்சுவா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதையடுத்து திங்கட்கிழமை காபித்தூள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். நீதிபதிகள் குற்றம் சுமத்தப்பட்டவனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

```
```

சம்பவம் நடந்தது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் ப்ரியங்கா உட்பட எதிர்க்கட்சிகள் குரல்கொடுக்க மறுக்கின்றனர் என ராஜஸ்தான் பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

…..ஆய்ஷா ரகுமான்