13-2-22/9.50am
உத்திரபிரதேசம் : உத்திரப்பிரதேசமாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் மேற்கு உ.பியில் நடந்து வருகிறது. தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் மத்திய அமைச்சரின் கார் விபத்துக்குள்ளானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாநிலங்களுக்கான நிதியமைச்சராக இருப்பவர் பங்கஜ் சௌத்ரி. இவரது மகன் ரோஹன். ரோஹன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பீஹாரிலிருந்து நேற்று இரவு மஹாராஜகன்ச் பகுதியில் உள்ள தனேவா தானேயில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.ஷியாம் தேவுரவா கவள்சரகத்திற்குட்பட்ட தரமௌலி கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த கரும்பு லாரி ஒன்று காரில் பலமாக மோதியது.
இதில் நிலைதடுமாறிய கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த அனைவரும் சம்பவஇடத்திலேயே மயங்கினர். போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதுகுறித்து பேசிய எஸ்.ஹெச்.ஓ ஆனந்த் குப்தா “ரோஹன் மற்றும் அவருடன் வந்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். லாரி ட்ரைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தற்செயலானதா அல்லது ஏதேனும் உள்நோக்கமா என விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பனிமூட்டம் அதிகம் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
…..உங்கள் பீமா