Friday, April 19, 2024
Home > அரசியல் > ரொம்ப ரோலிங் ஆவுதே..! கு.க.செல்வம் சோகங்கள்..!

ரொம்ப ரோலிங் ஆவுதே..! கு.க.செல்வம் சோகங்கள்..!

13-2-22/11.50am

சென்னை : பாஜக பிரமுகரான கு.க செல்வம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது நேற்று மீண்டும் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் பாஜகவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கு.க.செல்வம் வடபழனியில் வசித்துவருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு திமுக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அதன்பிறகு திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் 2020ம் ஆண்டு டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். அதன்பிறகு அதிகாரபூர்வமாக திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

`

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிஜேபியில் இருந்த அவர் திமுகவுக்கு எதிராக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்சிப்பணியில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார் என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று பாஜகவில் இருந்து விலகி முதல்வர் முக.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார். இவர் அதிமுகவில் தனது அரசியல் வாழ்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கு.க.செல்வம் கையில் துண்டுசீட்டை வைத்துக்கொண்டு அதைசரிவர படிக்கமுடியாமல் திணறினார். அவரின் வார்த்தைகள் கோர்வையில்லாமல் வெளிவந்து அனைவரயும் திகைக்க செய்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இப்படியா பேசுவார் என அங்கிருந்த செய்தியாளர்கள் முணுமுணுப்பதை காணமுடிந்தது. இனி திமுகவிலாவது கட்சிப்பணியை சரிவரச்செய்யட்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா