Friday, April 19, 2024
Home > செய்திகள் > கனிமொழி எம்பி எங்கே..!? கதறும் தூத்துக்குடி மக்கள்..! வீடியோ தொகுப்பு..!

கனிமொழி எம்பி எங்கே..!? கதறும் தூத்துக்குடி மக்கள்..! வீடியோ தொகுப்பு..!

26-11-21/10.53am

தூத்துக்குடி : தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளை பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தூத்துக்குடி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்துவருகிறது.திருச்செந்தூர் மற்றும் தூக்கித்தூக்குடியில் 23 செமீ அளவிற்கு மழை பெய்ததாக கூறப்படுகிறது. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

திமுக எம்பி கனிமொழியின் தொகுதியான தூத்துக்குடியில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும்தூத்துக்குடி வாலசமுத்திரம் என்ற ஊரில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் மாட்டிக்கொண்டனர்.

`

தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து கயிறுகள் கட்டி பத்திரமாக மக்களை மீட்டனர். இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் தூத்துக்குடி திமுக புள்ளிகளான கனிமொழி எம்பியோ அல்லது கீதா ஜீவனோ தொகுதி மக்களின் இன்னல்களை கண்டுகொள்ளவில்லை. ஆறுதல் சொல்லவோ நிவாரணப்பணிகளை அரசு இயந்திரம் மூலம் முடுக்கிவிடவோ கனிமொழி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தோப்பில் தென்னைமரம் விழுந்தால் கூட மோடியின் சாதி அதிமுகவின் இயலாமை என கூறிய கனிமொழி தனது அண்ணன் ஆட்சியில் நடக்கும் அவலங்களை மூடிமறைக்கவே முயற்சி செய்கிறார் என தூத்துக்குடி பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

```
```

மேலும் வடக்கு மண்டல பிஜேபி பொதுச்செயலாளரான வினோத் என்பவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ள நீரை தனது சொந்த செலவில் மோட்டார் அமைத்து வெள்ள நீரை வெளியேற்றியிருக்கிறார். ஆங்காங்கே பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

…….உங்கள் பீமா