15-4-22/12.12PM
சென்னை : இன்று திடீரென ட்விட்டரில் இளையராஜாவாவது மயிராவது என திமுக ஆதரவாளர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. எதற்கு இந்த ட்ரெண்ட் என தேடிப்பார்த்தால் இசைஞானி இளையராஜா அம்பேத்காருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியது தான் காரணம் என கூறப்படுகிறது.
இசைஞானி கூறுகையில் “பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கார் இருவரும் இந்தியாவை பற்றி பெரிதாக கனவுகண்டவர்கள். செயலின்மீது நம்பிக்கை கொண்டவர்கள். குழந்தைகளை காப்போம் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் சட்டம் மூலம் பெண்களின் வாழ்வில் பிரதமர் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்காரே பெருமைகொள்வார்” என குறிப்பிட்டுள்ளார்.
`
இதையடுத்து திமுக ஆதரவாளர்கள் இசைஞானியை பற்றி அவதூறாக ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
``````
…..உங்கள் பீமா