Tuesday, March 19, 2024
Home > அரசியல் > டாய்லெட் பேப்பர் முரசொலி..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை

டாய்லெட் பேப்பர் முரசொலி..! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை

15-4-22/11.32AM

சென்னை : கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் கேரளா சென்றிருந்தார். கண்ணூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் கேரள முன்னாள் முதல்வர் நம்பூதிரியின் ஆட்சியை கலைத்தது பிஜேபி என்கிற ரீதியில் பேசியிருந்தார்.

முக்கிய செய்தி : இந்த அருங்காட்சியகம் நமது துயரமான கடந்தகாலத்தை நினைவூட்டுகிறது. நம்மை அனைத்து பிளவுகளில் இருந்தும் எச்சரிக்கிறது.- CJIரமணா Partition museum அமிர்தசரஸ். பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

முதல்வரின் பேச்சுக்கு தமிழக பிஜேபி கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தது. இந்நிலையில் திமுக பத்திரிக்கையான முரசொலியில் ஒரு கேள்வி ஒருபதில் எனும் தலையங்கத்தில் ” பிஜேபி தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் படித்தவரா. எல்லாரும் அப்படித்தான் கூறினார்கள். நாமும் நம்பிக்கொண்டிருந்தோம். 1959ல் நம்பூதிரிபாட் ஆட்சியை கலைத்தவர் இந்திரா காந்தி. நாம் கலைத்தோமா என் பேட்டி ஒன்றில் கூறிய இந்த பேர்வழி எப்படி ஐபிஎஸ் தேர்வில் பாஸ் செய்தார் என்பது புரியாத புதிர்” என செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்க்கு பதிலளித்துள்ள பிஜேபி தலைவர் அண்ணாமலை ” மூன்றாந்தரமான டாய்லெட் பேப்பருக்கு சமமான பத்திரிகை ஒன்று தமிழ் பத்திரிக்கை என கூறிக்கொள்கிறது. அதன்பெயர் முரசொலி.

`

இது அறிவாலயத்தின் அதிகாரபூர்வ பத்திரிக்கை. நான் பேசிய வீடியோவும் அதற்க்கான ஆதாரங்களையும் நான் பதிவிட்டிருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

….உங்கள் பீமா

```
```

pls follow us on google news

https://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen