Saturday, July 27, 2024
Home > அரசியல் > குழப்பத்தில் உலகநாயகன்..! அதிர்ச்சிவைத்தியம் அளித்த பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

குழப்பத்தில் உலகநாயகன்..! அதிர்ச்சிவைத்தியம் அளித்த பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

21-2-22/16.20pm

சென்னை : உலக நாயகன் கமலஹாசன் தேர்தலின்போது அரசியல் செய்ய முயற்சிப்பதும் தேர்தல் முடிந்ததும் ஷூட்டிங்கில் நடிக்க முயற்சிப்பதும் சமீபகாலமாக தொடர்கதையாகிவருகிறது. அவரது கூட்டாளி ஒருவரின் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டது பரவலாக பேசப்பட்டது.

அப்போது மௌனமாக இருந்த உலகநாயகர் திடீரென நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மத அரசியல் செய்கிறது. மேலூரில் நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலன்று திமுகவினரால் நடத்தப்பட்ட வன்முறையை சுட்டிக்காட்ட மறுத்துவிட்டார். மேலும் திமுகவினரின் அத்துமீறல் காரணமாக இன்று ஏழு இடங்களில் மறுவாக்குப்பதிவு நடப்பதையும் சொல்ல மறந்துவிட்டார்.

`

தமிழகத்தில் சென்னையில் இரண்டு (வார்டு எண் 179 மற்றும் 51) வாக்குச்சாவடிகள் திருவண்ணாமலையில் இரண்டு வாக்குச்சாவடிகள் ஜெயங்கொண்டத்தில் இரண்டு மற்றும் திருமங்கலத்தில் ஒன்று என இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் குறிப்பிடாத உலகநாயகர் அரசியல் பேச பிஜேபி மீது விமர்சனம் வைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என பிஜேபியினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கமலஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

```
```

செய்தியாளர்கள் சந்திப்பில் ” பாவம் அவரே குழப்பத்தில் இருக்கிறார். பிக்பாஸ் நடிக்க வேண்டுமா அல்லது விக்ரம் நடிக்கவேண்டுமா அல்லது அடுத்த படம் ஏதாவது நடிக்க வேண்டுமா என குழம்பியிருக்கிறார். அவர் முழுநேர அரசியல்வாதியாக மாறட்டும். அதன்பின்னர் நான் பதிலளிக்கிறேன். இதுவரை மக்களுக்கு கமலஹாசன் என்ன செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா